கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் இன்னும் வசிக்கும் பொதுமக்களை பாதிக்கப்பட்ட பகுதிகளை விட்டு வெளியேறுமாறு அதிபர் வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்.
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் தற்போது இடம்பெற்று வரும் யுத்த மோதல்கள் மேலும் தீவிரமடையும் என எச்சரிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே உக்ரேனியர்கள் பலர் அப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாகவும், ஆனால் இன்னும் சிலர் அந்தப் பகுதிகளில் தங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உக்ரைன் ஜனாதிபதி, கிடைக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் மக்களின் உயிரைக் காப்பாற்றவும் ரஷ்ய இராணுவத்தின் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் பெரும்பகுதி இன்னும் ரஷ்ய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன்படி, அந்த பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களை விரைவில் வெளியேற்றாவிட்டால், வரும் குளிர்காலத்தில் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பேரழிவு நிலையை சந்திக்க நேரிடும் என உக்ரைன் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். டொனெட்ஸ்க் பகுதியில் 200,000க்கும் அதிகமான உக்ரைனியர்கள் இன்னும் தங்கியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.