இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்காக புதிய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குழுவை நியமித்த பின்னர் ஒரு மாதத்திற்குள் பரிந்துரைகளை பெற்றுக்கொடுக்கும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான திருத்தப்பட்ட கட்டண விகிதங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.