நேற்றிரவு 08 மணி நிலவரப்படி தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்து 38,259 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 143,188 பேர் பதிவு செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
QR அமைப்பின் ஊடாக மட்டுமே எரிபொருள் விநியோகம் செய்யப்பட்ட முதல் நாளான நேற்று, நாடளாவிய ரீதியில் 820 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்யப்பட்ட 457,360 வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.
வெளியில் வழங்கப்பட்ட மொத்த எரிபொருளின் அளவு 38 இலட்சத்து 50,615 லீற்றர்கள் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.