ஒவ்வொரு வாகனமும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வாகன சாரதியின் அல்லது வாகனத்தை பயன்படுத்துபவரின் கையடக்க தொலைபேசி இலக்கம், அடையாள அட்டை, கடவுச்சீட்டு அல்லது வணிகப் பதிவு இலக்கம் போன்றவற்றைப் பயன்படுத்த முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 12 முதல், பல வாகனங்களைக் கொண்ட அரச மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறியீடு மற்றும் அவர்களின் அனைத்து வாகனங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட மொபைல் ஃபோன் எண்ணைக் கொண்டு பதிவு செய்ய முடியும்.
அவ்வாறு செய்யும்போது பெறப்பட்ட தற்காலிக QR குறியீட்டை நீக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.