இந்த நாட்டில் கொவிட் தொற்று பரவியுள்ள போதிலும் பாடசாலைகளை மூட வேண்டாம் என குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா கல்வி அதிகாரிகளிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த கோவிட் தொற்றுநோய்களின் போது பாடசாலைகள் மூடப்பட்டதன் காரணமாக கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு பல்வேறு மனநலப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், தொலைதூரத்தின் காரணமாக சில சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசமான காட்சிகளைப் பார்க்கத் தூண்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்று நிபுணர் மருத்துவர் குறிப்பிடுகின்றார்.
வளர்ந்த நாடுகளில் கொவிட் நோய் பரவினாலும், அந்த நாடுகளில் பாடசாலைகளை மூடப்படவில்லை என்றும் டாக்டர் தீபால் சுட்டிக்காட்டுகின்றார்.
நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இயன்றவரை சுகாதாரப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் எனவும், அவர்கள் பாடசாலை செல்வதை ஒருபோதும் நிறுத்தக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலை படிப்பை இடைநிறுத்துவதால் பல குழந்தைகள் மனநலப் பிரச்சனைகளால் பல உடல் நோய்களுக்கு ஆளாகியிருப்பதாகவும், இதில் அடிக்கடி தலைவலி, வயிற்று வலி, சோம்பல், ஞாபக மறதி போன்றவற்றைச் சுட்டிக் காட்டலாம் என்றும் நிபுணர் வலியுறுத்துகிறார்.