ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்ட சர்வகட்சி அரசாங்கத்தின் காலவரையறை அல்லது பொறுப்புகள் தொடர்பில் குறிப்பிட்ட விளக்கங்கள் எதுவும் இல்லாததால், அவ்வாறான சர்வகட்சி அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என தேசிய மக்கள் படை வலியுறுத்துகிறது.
கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திரு அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.