அரச அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு உரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு இன்று (03) ஆரம்பமாகி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், காணி உரிமையாளர்களுக்கு அரச அனுமதிப்பத்திரம் மற்றும் சுதந்திரப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
“நாங்கள் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துகிறோம். அரசு உரிமம் பெற்ற நில உரிமையாளர்களுக்கு இலவச பத்திரம் வழங்கப்படும் மேலும் மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வவருவதாகவும் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சியில், சமூகத்தின் பலவீனமான, ஆதரவற்ற மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாகவும். நாட்டின் தொழிலதிபர்கள் தங்கள் திறமைகள் மூலம் முன்னேறுவதற்கான வழிகளை விரிவுபடுத்துவதன் மூலம் ஊக்குவிக்கப்படுவதக்கவும் ஜனாதிபதி உரையில் தெரிவித்தார்.