மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி காயப்படுத்தியமை மற்றும் பொலிஸ் வண்டியை சேதப்படுத்தியமை தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
விசாரணைகளின் போது கிடைத்த நெருக்கமான கண்காணிப்பு காட்சிகள் மற்றும் காணொளி காட்சிகளின் அடிப்படையில் பொலிஸ் வண்டியை தாக்கி சேதப்படுத்திய முக்கிய நபர்கள் என அடையாளம் காணப்பட்ட நபர்களின் அடையாளங்களை கண்டறிய பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பின்வரும் புகைப்படங்களில் உள்ள நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்: 07108591735, 0718592735, 0718591733.