கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி அலறி மாளிகை கட்டிடத்திற்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்ததையடுத்து ஏற்பட்ட சேதங்கள் மற்றும் சேதமடைந்த பொருட்களின் பெறுமதி தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளது.
அதனை எதிர்வரும் 8ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முகாமைத்துவ செயலாளருக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்குமாறும் நீதவான் முகாமைத்துவ செயலாளருக்கு வழங்கிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மனுவொன்றை தாக்கல் செய்து விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.