எரிவாயு விலை குறைப்பு எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்கள் உணரும் வகையில் விலை குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
புதிதாக தயாரிக்கப்பட்ட புதிய விலைச் சூத்திரத்தினால் எரிவாயுவின் விலை குறைவடைந்துள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
20 நாட்களில் 22 லட்சம் காஸ் சிலிண்டர்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.