தைவானைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் சீனா ஆரம்பித்துள்ள பாரிய இராணுவப் பயிற்சி காரணமாக சர்வதேச விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட பகுதியில் விமானங்களை நிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தைவான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பறக்க வேண்டிய 50க்கும் மேற்பட்ட விமானங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனா-தைவான் கடல் பகுதியில் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய ராணுவப் பயிற்சி இதுவாகும், இது வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என தெரிவிக்கப்படுகின்றது .
இராணுவப் பயிற்சியின் போது சீனா வீசிய 11 பாலிஸ்டிக் ஏவுகணைகள் தங்கள் கடற்பரப்பில் தரையிறங்கியதாக ஜப்பானும் தைவானும் இன்று தெரிவித்துள்ளன. சீனாவின் 22 போர் விமானங்கள் தங்கள் வான்வெளியை ஆக்கிரமித்துள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது. அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, தனது ஆசியப் பயணம் தைவான் அல்லது பிராந்தியத்தின் நிலைமையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்று இன்று தெரிவித்தார்.
ஜப்பான் சென்றடைந்த அவர் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார். எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில் இருந்து அமெரிக்கா பாடம் கற்றுக் கொள்ளும் என நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது.