பல தனியார் பஸ் சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தியுள்ள நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் தனியார் பஸ் சேவைகள் தடைப்பட்டுள்ளன. இதனால் இன்று காலை பணிக்கு வருவார்கள் என எதிர்பார்த்திருந்த பல பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் இருப்பினும், உள்ளூர் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கிதாகவும் , தனியார் பேருந்துகளில் சுமார் 10 சதவீதம் இயங்கியதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர் .
எரிபொருள் பெறப்பட்ட பகுதிகளில் குறுகிய பயண சேவை பஸ்கள் மாத்திரமே இயங்கும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பஸ் பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்கும் முகமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களின் சேவைகள் முன்பை விட இன்று அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், தமது பேருந்துகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்து தனியார் பேருந்து சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன. நேற்று நள்ளிரவில் இருந்து சராசரி பஸ் கட்டணம் 11.1 மற்றும் 4 சதவீதம் குறைந்துள்ளது.