நாட்டின் எரிசக்தித் துறையின் தேவைகளை அடைவதற்கு ஒன்றிணைந்து செயல்பட நம்புவதாக சர்வதேச வளர்ச்சிக்கான ஐக்கிய அமெரிக்காவின் சபை தெரிவித்துள்ளது.
அதன் அதிகாரிகள் குழுவிற்கும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், எரிசக்தி துறையின் தேவைகள், சீர்திருத்தங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்கள், தொழில்நுட்ப உதவி மற்றும் வள மேலாண்மை குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.