மலைப் புலியொன்று கூரையை உடைத்து வீட்டினுள் வீழ்ந்துள்ளதாக லிந்துலை பிரதேசத்தில் இருந்து செய்தியொன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பான சம்பவம் லிதுல லோகி தோட்டத்தில் உள்ள வீடொன்றிலே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
எனினும் இரவு 10 மணியளவில் புலி வீட்டினுள் வீழ்ந்ததையடுத்து வீட்டில் இருந்தவர்கள் வீட்டில் இருந்து தப்பி உயிர் பிழைத்துள்ளனர்.
பின்னர் புலி தப்பிக்க முடியாதவாறு வீட்டின் ஜன்னல், கதவுகள் அனைத்தையும் பூட்டிவிட்டு வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்படி, ரந்தெனிகல கால்நடை வைத்தியசாலையின் கால்நடை வைத்தியரின் தலையீட்டில் வனவிலங்கு அதிகாரிகளினால் மயக்க மருந்து செலுத்தப்பட்டு பாதுகாப்பாக கூண்டில் அடைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாய் ஒன்றை வேட்டையாட வந்த புலி கூரை உடைந்ததினால் வீட்டினுள் வீழ்ந்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.