ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய கதிர்காமம் எசல திருவிழாவிற்காக வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நீர் விநியோகம் என்பனவற்றை வழங்குவதற்காக 2.04 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்டச் செயலாளர் குணதாச சமரசிங்க, பாதயாத்திரையாக வரும் யாத்திரிகர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்ததை அடுத்து, அவ்வாறான வசதிகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இது தொடர்பான வசதிகள் வழங்கப்படவுள்ளது.
வருடாந்த எசல திருவிழாவின் போது, 30,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கதிர்காமம் வழிபாட்டுத்தலத்தை தளத்தை அடைய 90 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் நடந்து செல்கின்றனர்.
அந்த பயணத்தின் போது பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் சில சமயங்களில் வன விலங்குகளினால் ஏற்படும் அனர்த்தங்களையும் எதிர்கொள்வதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் அவதானம் செலுத்திய ஜனாதிபதி, அந்த பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
