டெங்கு, கொவிட் மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயினால் அதிகளவான சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக அதன் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.
தற்போதைய வைரஸ் காய்ச்சல் குறித்து பெரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.