அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்தும் எதிர்பார்ப்பு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் காரணமாகவே அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊழலை தடுப்பதற்காக எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் வரைவு சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தொடர்பிலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
இதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கான பிணை உத்தரவு எதிர்வரும் 8ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.