முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சிங்கப்பூரில் தங்குவதற்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் வழங்குமாறு சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசா காலாவதியானதையடுத்து, பதினொன்றாம் திகதி நாட்டிற்கு திரும்பவிருந்தார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி, இம்மாதம் இறுதி வாரம் வரை தங்குவதற்கான அனுமதியினை வழங்கி இருக்கின்றது.
பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த மாதம் 14ஆம் திகதி மாலைதீவு ஊடாக சிங்கப்பூர் சென்றதையடுத்து, அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டார்.