கண்டி எசல பெரஹரா திருவிழாவின் இரண்டாவது பெரஹரா அன்று இரவு, தனது தாயுடன் பெரஹராவை காண வந்த கண்டியைச் சேர்ந்த 9 வயது சிறுவனை கடத்திச் சென்ற சந்தேகநபர் 19ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கண்டி நீதவான் நீதிமன்றம் இன்று (06) இந்த உத்தரவை வழங்கியது.
கண்டி பேராதனை பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய இந்த நபர், குழந்தையுடன் ரயிலில் அவிசாவளைக்கு சென்று கொண்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் நடந்து கொண்டதால் புகையிரத பயணிகள் சந்தேக நபரை மஹரகம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இன்று (06) சந்தேக நபரையும் குழந்தையையும் கண்டி தலைமையகத்திற்கு அழைத்துச் சென்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது குழந்தையின் பாட்டியை தமக்குத் தெரியும் எனவும், குழந்தையை கொண்டு வருவதற்காக அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தார்.
குறித்த நபரை தாங்கள் இதுவரை காணவில்லை என குழந்தையின் பாட்டியும் தாயும் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் இதற்கு முன்னரும் சிறு குழந்தையொன்றை கடத்த முயற்சித்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் கண்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் கண்டி தலைமையக பொலிஸார் குழந்தையை வைத்திய பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.