நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய மற்றும் சமகி ஜன கூட்டமைப்பு இணைந்து நாட்டை தற்போதைய நிலைமையிலிருந்து மீட்பதற்காக பொதுவான பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று (06) நடைபெற்ற சமகி ஜன பலவேகவின் தெரணியகல தொகுதிக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டமாகும், இதில் எந்தவிதமான அமைச்சுப் பதவிகளோ, பதவிகளைப் பகிர்ந்தோ பிரவேசிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரமளிக்கப்பட்ட நிறைவேற்று நாடாளுமன்றக் குழுக்கள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதுடன் அமைச்சுப் பதவிகளைப் பெற்று மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தத் தேவையில்லை என்பதே சமகி ஜன பலவேகவின் யோசனையாகும்.
பாராளுமன்றத்தின் சக்திவாய்ந்த குழுக்களின் ஊடாக நாட்டின் நல்ல பணிகளுக்கு உறுதுணையாக இருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களைப் போன்று அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளாமல் நாட்டை சுபீட்சமான நாடாக மாற்றுவதற்கான பொதுவான வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.