இயற்கை விவசாயக் கொள்கையில் இருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, அடுத்த பருவத்தில் பயிரிடப்படும் நெற்செய்கைகளில் 30 வீதமான வயல்களை இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்த ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாயிகளுக்கு தரமான இயற்கை உரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தரத்தை சரிபார்க்காமல் எந்த வகையான சேதன உரங்களுக்கும் அனுமதி வழங்குவதில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அடுத்த பருவத்தில் உரங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.