ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அன்றைய தினம் பிற்பகல் 03.00 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஜனதா விமுக்தி பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இரு கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது. சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்றும் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.