நாட்டில் குரங்கு அம்மை நோய் தொற்றியவர்கள் இருக்கிறார்களா என்பதை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கான பரிசோதனை கருவிகள் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
பொரளை மருத்துவ பரிசோதனை நிறுவனம் மற்றும் கண்டி பொது வைத்தியசாலைக்கு நாளை (08) உரிய பரிசோதனை கருவிகள் வழங்கப்படும் என வைத்தியர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார்.