ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் பெலவத்த அக்குரேகொடவில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
ஜனாதிபதிக்கான இராணுவ அணிவகுப்பும் அங்கு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன, பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.