வெளிநாடு ஒன்றில் தயாரிக்கப்பட்ட 50,000 சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வந்த ஆணும் பெண்ணும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிராண்ட்பாஸ் பகுதியில் வசிப்பவர்களான இவர்கள் சிகரெட் கையிருப்பை தமது பயணப் பொதிகளில் மறைத்து வைத்து இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த சிகரெட் கையிருப்பு சுமார் நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியானது எனவும், அவற்றை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.