பதினான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 17 வயது மாணவன் ஒருவர் பொத்தல பொலிஸாரால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்மிமன பிரதேசத்தை சேர்ந்த சிறுமி, பத்தேகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபரை சில காலமாக காதலித்து வந்துள்ள நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும், சிறுமி துணை வகுப்புக்கு செல்வதாக கூறி குறித்த காதலனுடன் வீட்டை விட்டு முச்சக்கர வண்டியில் புறப்பட்டு சென்றுள்ளார்.
பொத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெறிச்சோடிய பிரதேசத்தில் சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் வைத்து சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். சந்தேக நபரின் காதலன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
பொத்தல பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கயான் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் சந்தேக நபரான காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.