இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் இன்று (10) பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸை சந்தித்தார்.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகள் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக காண்பதே அமெரிக்காவின் நம்பிக்கை என ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறும் நடவடிக்கையில் இலங்கை தமது ஆதரவைப் பெறும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
மேலும், நாட்டில் தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலை குறித்தும், ஆகஸ்ட் 9ம் தேதி எந்த ஒரு பேரழிவு சம்பவமும் நடக்கவில்லை என்றும் அமெரிக்க தூதுவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.