இன்று (11) காலி தெவத்த சந்தியில் 500 மில்லிகிராம் போதைப்பொருளுடன் விமானப்படை வீரர் ஒருவர் காலி துறைமுக பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகத்திற்குரிய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போதைப்பொருளுக்கு அதிக அடிமையானவர் என்பதுடன், eZ cash முறையில் போதைப் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய விமானப்படை சிப்பாய் 2018 ஆம் ஆண்டு படைகளுக்கு இடையில் நடைபெற்ற 57 கிலோ எடைப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பதுவும் முக்கியமான விடையமாகும்.
அவர் நாளை (12) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.