தமக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் ரஞ்சன் ராமநாயக்க கையொப்பமிட்டுள்ளார். குறித்த கடிதத்தில் ரஞ்சன் ராமநாயக்க இன்று உரிய ஆவணங்களுடன் கையொப்பமிட்டதாக அவரது சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கடிதத்தில் ரஞ்சன் ராமநாயக்க வெலிக்கடை சிறைச்சாலையில் கையொப்பமிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.