அரச ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்களும் பணிக்கு அழைப்பது தொடர்பில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அரச ஊழியர்களை அழைப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஜூலை 24ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு அரச ஊழியர்களை அழைப்பதற்கு தடை விதித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
எவ்வாறாயினும், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணப்படுவதால், பொது சேவைகளும் இயங்கி வருகின்றன. இதன்படி, பொதுமக்கள் தற்போது அரசாங்க அலுவலகங்களில் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனை கருத்திற் கொண்டு அரச அலுவலகங்களின் செயற்பாடுகளை வழமை போன்று பேண வேண்டிய தேவை எழுந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
இதன்படி, வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் காலம் நிறைவடைந்ததன் பின்னர், அரசாங்க ஊழியர்களை ஐந்திற்கு ஒருமுறை பணிக்கு அழைப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே மேலும் தெரிவித்துள்ளார். நாட்களில்.