எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வாரத்தில் 5 நாட்கள் பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு இன்று தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சர் தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சிரமம் உள்ள பிரதேசங்களில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான பொருத்தமான போக்குவரத்து திட்டத்தை தயாரிக்குமாறு அனைத்து மாகாண அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ள பாடசாலை வாரத்தில் போக்குவரத்துச் சிரமங்களினால் மேலும் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உரிய நிவாரணங்களை அதிபர்கள் வழங்குவதுடன், அந்த நிவாரணங்களை வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்களுக்கு அறிவிக்கவுள்ளனர்.
இதற்கிடையில், அடுத்த மூன்று மாதங்களில், பாடத்தை கற்பிப்பதற்காக, பாடசாலை நேரத்தை பயன்படுத்த வேண்டும், மேலும் பாடசாலை நேரங்களுக்கு வெளியே இணை மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளை மேலும் மட்டுப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.