சர்ச்சைக்குரிய சீனாக் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்க துறைமுக மாஸ்டருக்கு வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
யுவான் வாங்-5, சீனா விண்வெளி, செயற்கைக்கோள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை ரிசீவர் ஆராய்ச்சி கப்பல், சமீபத்திய நாட்களில் தீவிர இராஜதந்திர பேச்சுக்கு உட்பட்டது.
இந்த கப்பல் வருகைக்கு இந்தியாவில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.