மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் முறையான நிர்வாகத்தின் கீழ் மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மாதாந்த மின் கட்டணத்தைக் குறைக்க முடியும் என இலங்கை எரிசக்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை குறைப்பதற்காக தேவையற்ற மின்விளக்குகளை அணைக்க பழகுவதும் மிகவும் அவசியம் என அதன் பிரதி பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை சூரிய சக்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில், நாளாந்தம் அதிகளவு மின்சாரத் தேவை காணப்படும் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரையான காலப்பகுதியில் மின்சார பாவனை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். .
ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை சராசரியாக 75 வீதத்தால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.