இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டதன் பயனை நுகர்வோருக்கு கிடைக்குமா என்பதை அறிய நாடளாவிய ரீதியில் சோதனைகள் நடத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் தொடர்பில் அந்த சோதனைகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்த விற்பனையாளர்கள் திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் நுகர்வோருக்கு அந்த நன்மையை வழங்குகிறார்களா என்பதைக் கண்டறிய சோதனைகள் நடத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.