எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோட்டா முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் தொடர்பில் எட்டப்பட்டுள்ள புதிய தீர்மானம் குறித்து டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
அரசாங்க நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கோட்டா முறையின் கீழ் எரிபொருளைப் பெறக்கூடிய புதிய முறையை தீர்மானித்துள்ளார்.
இதன்படி, அரச நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஒரு கையடக்கத் தொலைபேசி இலக்கம் அல்லது பல கையடக்க தொலைபேசி இலக்கங்களுடன் பல வாகனங்களைப் பதிவு செய்ய முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாளை ஆரம்பமாகவுள்ள வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டின் புதுப்பிப்பு இன்று நள்ளிரவில் மேற்கொள்ளப்படவுள்ளது.