சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஒரு இலட்சம் மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று நேற்று இலங்கையை வந்தடைந்தது. அதன் மாதிரி சோதனை இன்று நடைபெற உள்ளது. ஆய்வுக்குப் பின்னர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
மண்ணெண்ணெய் உற்பத்தி 3 நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படும் எனவும் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மண்ணெண்ணெய் விநியோகம் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனினும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நாளை ஆரம்பிக்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இலங்கை வந்த கச்சா எண்ணெய் கப்பலின் மாதிரி சோதனை இன்னும் நிறைவடையாததே இதற்குக் காரணம்.