இலங்கையில் 06 சர்வதேச தமிழ் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டமைக்கான காரணங்களை பாதுகாப்பு அமைச்சு அறிவிக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
இது தொடர்பான காரணங்களை அறிந்து கொள்ளும் உரிமை இந்த நாட்டு மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.