அரசியல்வாதிகள் எந்த வகையிலும் சட்டத்தை சீர்குலைக்க அனுமதிக்கக் கூடாது என பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இது வரையில் நாட்டுக்கு தேவையான உண்மையான சுதந்திரம் கிடைக்காது என்றார்.
புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார். இதன் இரண்டாம் கட்ட நிதியுதவி இன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்றது.