இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கடல்சார் கண்காணிப்பு விமானம் இன்று உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன் ஏர் 228 என அழைக்கப்படும் விமானம் இன்று இலங்கையிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்தியாவுடனான மூன்று வருட பேச்சுவார்த்தையின் பலனாக இந்த விமானம் இலங்கைக்கு சொந்தமாக வழங்கப்படுவதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன தெரிவித்தார்.
விமானத்தின் மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும் விமானப் படையைச் சேர்ந்த 15 பேர் கொண்ட விமானிகள் குழுவுக்கு இந்தியாவில் 4 மாத பயிற்சி அளிக்கப்பட்டு விமானம் பற்றி அறிந்து கொள்ளப்பட்டது. இந்த விமானத்தை இலங்கையானது பெற்ற பின்னர், விமானப்படை மற்றும் கடற்படையினர் அதை கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த உள்ளனர்.
சர்ச்சைக்குரிய சீன கப்பல் யுவான் வாங் ஃபைவ் இலங்கைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாகவே இந்த இந்திய விமானம் இலங்கைக்கு சொந்தமானது என்பது சிறப்பம்சமாகும். குறித்த கப்பல் நாளை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.