போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவின் முக்கிய துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரான கதிரா என பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அழைக்கப்படும் பிரபோத குமார கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குற்றச் செயல் செய்வதற்காக பொரலஸ்கமுவ, புலத்சிங்கள மாவத்தையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த தங்கியிருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததையடுத்து செயற்பட்ட அதிகாரிகள் சந்தேகநபரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து நான்கு தோட்டாக்கள் மற்றும் 17 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், இவர் வெலிகம, மிதிகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனவும், பல கொலைகள், கொள்ளைகள் மற்றும் கற்பழிப்புச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.