யுவான் வாங் ஃபைவ் என்ற சர்ச்சைக்குரிய கப்பலுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் பிரவேசிக்க இலங்கை அனுமதியளிப்பதால், இந்தியாவில் இருந்து பெறப்படும் யூரியா உர விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யூரியா உரம் கையிருப்பு தொடர்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், அந்த உரம் கையிருப்பு இந்த நாட்டிலேயே பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்திய கடன் உதவியின் கீழ் 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் நாட்டுக்கு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது அந்தவகையில் கடந்த முறை 45,000 மெற்றிக் தொன் கொண்ட கப்பல் நாட்டை வந்தடைந்ததுடன் விவசாயிகளுக்கு தற்போது உரம் விநியோகிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள எஞ்சிய 20,000 மெற்றிக் தொன் யூரியா உரம் அடங்கிய கப்பலும் எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.