தற்போது தினசரி மின்வெட்டு மூன்று மணி நேரமாக நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நொரோச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது அலகு திடீரென செயலிழந்தமையே இதற்குக் காரணம். இன்று முதல் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இலங்கை மின்சார சபைவெளியிட்டுள்ள தகவலின் படி இன்றைய தினம் மின்வெட்டை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அதன் தலைவர் நலிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.
இன்றும் நாளையும் சுமார் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்கள் மட்டுமே மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது. இதன்படி,
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவலின் படி மின்வெட்டை நீடிப்பது தொடர்பில் இதுவரை எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்படவில்லை என அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.