நெருக்கடியான சூழ்நிலையில் அரசின் வருவாயை அதிகரிக்க சிறிது காலம் எடுக்கும் என்றும், அதுவரை அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நிதி அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அனைத்து அரச நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் நடவடிக்கைகளை பின்பற்றவும், அரச நிறுவனங்களின் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் குறித்த சுற்றறிக்கை அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, எரிபொருள் மற்றும் தகவல் தொடர்பு கொடுப்பனவுகளை செலுத்துதலில் கட்டுப்பாடு, நீர் மற்றும் மின்சார கட்டணச் செலவுகள் மீதான கட்டுப்பாடுகள், கட்டிடங்களை நிர்மாணித்தல் மற்றும் வாடகைக்கு விடுதல், வெளிநாட்டு ஆய்வுப் பயணங்கள் மற்றும் உள்நாட்டு நிதியினால் மேற்கொள்ளப்படும் பயிற்சி நிகழ்ச்சிகளை அமைச்சர்கள் அமைச்சரவையின் அனுமதியின்றி நிறுத்துதல். அமைச்சுக்கள் அல்லது நிறுவனங்களின் மட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன பல்வேறு கொடுப்பனவுகளை வழங்குவதை நிறுத்துதல் மற்றும் பல்வேறு நலன்புரி அல்லது மானியத்துடன் கூடிய வளர்ச்சித் திட்டங்களுக்கு புதிய பொறுப்புகளை உருவாக்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று மேற்படி சுற்றறிக்கை அறிவுறுத்துகின்றது.