நாளாந்த மின்வெட்டு அட்டவணை நாளை முதல் 03 மணித்தியாலங்களாக நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நொரோச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் 300 மெகா வாட் திறன் கொண்ட முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்தது.
இந்த ஜெனரேட்டரை புனரமைக்க சுமார் 02 வாரங்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும், லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது (அலகு 02) ஜெனரேட்டர் இந்த நாட்களில் அத்தியாவசிய பராமரிப்புக்கு உட்படுத்தப்படுவதால், அதன் மொத்த கொள்ளளவான 300 மெகாவாட் தேசிய அமைப்பிற்கு இழக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தேசிய மின்சார சபையினால் 600 மெகாவாட் மின்சாரம் குறைந்துள்ளது.
இந்நிலைமை காரணமாக நாளை முதல் 03 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.