முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடுகளுக்குச் செல்லும் எந்தவொரு செலவுக்கும் தனது பணத்தைச் செலவிட மாட்டார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்த செலவுகள் அனைத்தும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட பணத்தில் மேற்கொள்ளப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதியின் செலவுகளுக்கு அரசாங்கம் பணம் செலவழிப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அமைச்சர், ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் மேலும் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, வெளிநாட்டில் உள்ள தனது அனைத்து செலவுகளும் அவரது தனிப்பட்ட பணத்தில் செலவிடப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். கடந்த ஜூலை 09ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் பின்னர் முதலில் சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார்.