05 கிலோ கிராம் கொக்கேய்னுடன் வெளிநாட்டு சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரது சூட்கேஸில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொக்கெய்னின் பெறுமதி சுமார் 24 கோடியே 50 இலட்சம் ரூபா என சுங்க ஊடகப் பேச்சாளர், சுங்க சட்ட விவகார பிரதிப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.
சந்தேக நபர், 60 வயதான போலந்து நாட்டவர் எனவும் கொலம்பியாவில் இருந்து கட்டார் வந்து, பின்னர் இலங்கைக்கு வந்திருக்கின்றார்.
அவரது சூட்கேஸில் பயன்படுத்தப்பட்ட தொலைநகல் இயந்திரத்தில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கொக்கைன் கண்டுபிடிக்கப்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.