பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, நாட்டில் மின்சார பாவனை 20 வீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. மின்சார பாவனை அதிகமாக இருந்த நிலையில் தற்போது மின்சார பாவனை குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதைய மின்வெட்டு இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கலாம் என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மின்வெட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததே காரணம் என அதன் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.
மேலும், மின்வெட்டை குறைப்பதற்கு தெளிவான வேலைத்திட்டம் தேவை என இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சத் இந்துவர தெரிவித்துள்ளார்.