ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பயணத்தின் போது, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் கடன் மறுசீரமைப்பு குறித்து இருதரப்பு விவாதங்களை நடத்த உள்ளார்.
மேலும், இலங்கைக்கு கடனுதவி வழங்கிய இந்தியா, சீனா உள்ளிட்ட பிராந்தியத்தில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ஜப்பான் தலையிடுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஜனாதிபதி இந்த நேர்காணலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.