பொலிஸாருக்கு பாதுகாப்பு அமைச்சகம் அளித்த அனுமதி
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பட்டத்தின் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர்களான வசந்த முதலிகே மற்றும் ஹஷான் குணதிலக்க ஆகியோரை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே தடுப்பு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 18ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நடத்திய பேரணியின் போது வசந்த முதலிகே மற்றும் ஹஷான் குணதிலக்க உள்ளிட்ட 16 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
இதேவேளை, கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 16 பேர் அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (19) பிணையில் விடுவிக்கப்பட்டனர்.