சிரியாவில் அல்பாப் நகரில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் ஐந்து குழந்தைகளும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராக்கெட் தாக்குதலில் மேலும் 3 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடரும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரிய அரச படைகள் இந்த ராக்கெட் தாக்குதலை நடத்தியதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குர்திஷ் குழுக்களால் வழிநடத்தப்படும் சிரிய ஜனநாயகப் படைகளின் தலைவருக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.